Saturday 27 April 2013

மரக்காணத்தில் யாரை யார் அடித்தது?முற்போக்கு வேடதாரிகளின் கவனத்திற்கு!

மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவுக்கு வந்த இளைஞர்களில் இரண்டு பேர் மரக்காணம் அருகே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகளும் பத்திரிகைகளும் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர். (இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை)

அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் வன்னியர்களின் இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டது. ஆனால்,தமிழக அரசின் மூலமாகவும் நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும்  மாநாட்டைத் தடுக்க ஒரு கூட்டம் முயற்சித்தது. அத்தனைத் தடைகளையும் உடைத்து மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது.
மாபெரும் மாநாடு 
இந்த மாநாட்டிற்கு எப்படியாவது குந்தகம் விளைவிக்க வேண்டும் என்று துடித்த ஒரு கூட்டம் அதற்காக திட்டமிட்டு மரக்காணத்தில் கலவரத்தை அரங்கேற்றியது மட்டுமல்லாமல், இரட்டைப் படுகொலைகளையும் செய்து, இப்போது வன்னியர்கள் மீதே குற்றச்சாட்டை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர்.

யாரை யார் தாக்கியது?

கீழே உள்ள காணொலியில் வெளியூர்களில் இருந்த மாமல்லபுரம் நோக்கி செல்லும் வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தெளிவாக பதிவாகியுள்ளது.

அப்பாவி வன்னியர்கள் மீது தாக்குதல்


இந்தக்கலவரத்தில் அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ், குடந்தையை சேர்ந்த விவேக் ஆகிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

மரக்காணத்தில் கலவரம் ஏன் நடந்தது?

மரக்காணத்தில் வன்னியர்களுக்கு எதிரான கலவரத்தை திட்டமிட்டு நடத்தி படுகொலையும் செய்தக் கூட்டம் இப்போது கலவரத்துக்கு வன்னியர்கள்தான் காரணம் என்று கற்பனையான கட்டுக்கதைகளைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் எல்லா சாலைகளிலும் வன்னியர்கள் மாமல்லபுரம் நோக்கி வந்தனர். வன்னியர்களுக்கு கலவரம் செய்வது நோக்கமாக இருந்திருந்தால் எல்லா பகுதியிலும் கலவரம் நடந்திருக்க வேண்டும். ஆனால், மரக்காணம் தவிர வேறு எங்குமே அது போல நடக்கவில்லை.

ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நடந்த இக்கலவரத்துக்கு இரண்டு விதமான கட்டுக்கதைகளை பத்திரிகைகள் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன. (அதாவது பத்திரிகைகளில் ஊடுருவி இருக்கும் வன்னியர் எதிர்ப்புக்கூட்டம் காழ்ப்புணர்ச்சியுடன் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீது சேற்றைப் பூச முயற்சிக்கிறது)

"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு" என்பது போல, வன்னிய எதிரிகளின் பச்சைப் பொய் எட்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், அவசரத்தில் ஆளுக்கொரு பொய்யை மாற்றிச் சொல்லி அம்பலப்பட்டு நிற்கிறது சதிகாரர்கள் கூட்டம். அதனைக் கீழே காண்க:

கட்டுக்கதை 1: மாநாட்டுக்கு சென்ற வாகனம் இருசக்கர ஊர்தி மீது மோதியதே காரணம்.

மாமல்லபுரம் வன்னியர் மாநாட்டுக்கு சென்ற பேருந்து ஒன்று, இரண்டு வாலிபர்கள் சென்ற இருசக்கர ஊர்தி மீது மோதியதாம். இதனால் கலவரம் மூண்டதாம். இந்த செய்தி டெக்கன் க்ரோனிகல் மற்றும் தினத்தந்தி ஆகிய நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.

"two youths identified as Ramesh and Hariharan were going on a two-wheeler towards Marakanam when a bus carrying PMK volunteers and bound for Mamal­lapuram reportedly dash­ed against the vehicle in­j­u­ring them. As news ab­out the incident spr­e­ad, a group of people blo­cked the East Coast Road resu­lting in vehicles piling up on the arterial road"   - Police fire in air on ECR Deccan Chronicle Saturday, Apr 27, 2013 


கட்டுக்கதை 2: வன்னியர்கள் குடித்துவிட்டு பீர்பாட்டிலை அடித்ததே கலவரத்துக்கு காரணம்.

"பாமகவினர், வேன் மீது அமர்ந்து பீர் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பீர் பாட்டிலை நின்று கொண்டிருந்தவர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் பொதுமக்கள் திரண்டு சாலைக்கு வந்தனர்." என்று தி இந்து மற்றும் தினகரன் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 "the violence erupted around Thursday noon when a small group of Vanniyar Sangam members were drinking near the social forest on the side of ECR. When they were questioned, a larger group assembled immediately and entered the Kattayantheru area of the Marakkanam Colony through the forest armed with sticks and petrol bombs" - Dalits lose certificates, valuables in violence unleashed by drunken mob, The Hindu, April 27, 2013


- இப்படி ஒரே கலவரத்துக்கு இரண்டு விதமான கட்டுக்கதைகளை கட்டமைத்துள்ளனர்.

இதிலும் தி இந்து ஒருபடி மேலே போய், 'மாட்டுக்கொட்டகையைக் கூட விடவில்லை' என்று எழுதியுள்ளது. (பசுமாட்டின் மீது தி இந்துவுக்கு உள்ள பாசம் புரிந்துகொள்ளக் கூடியதுதான்). இதனை நிரூபிக்க 'எரிந்த கொட்டகைக்குள் ஒரு எரியாத மாட்டை படுக்க வைத்து' புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தைக் கீழே காண்க.

எரிந்த கொட்டகைக்குள் ஒரு எரியாத மாடு

தேவர் ஜெயந்தியிலும் தர்மபுரியிலும் படித்த பாடம்.

தேவர் குருபூஜைக்கு சென்று வந்த அப்பாவிகளை வழிமறித்து கொலைசெய்து, ருசிகண்ட கூட்டம் இப்போது அதனை மரக்காணத்திலும் அரங்கேற்றியுள்ளது.

தர்மபுரியில் சிறிய கொட்டகைகளைப் பிரித்துப் போட்டு உள்ளே வைத்திருந்த ஏராளமான நகை பணத்தைக் காணவில்லை என்கிற கட்டுக்கதையைக் கட்டமைத்து அரசாங்கத்திடம் பணம் பறித்தது போல - இப்போது மரக்காணத்திலும் நகையைக் காணவில்லை என்று நாடகம் ஆடுகின்றனர். (அரசாங்கத்திடம் பணம் பறிக்க இப்படி ஒரு வெட்கம்கெட்ட பிழைப்பு)

"வன்னியனை அடித்துவிட்டு வன்கொடுமை வழக்கா?

வன்னியனை  கொலைசெய்துவிட்டு வன்னியனுக்கே தண்டனையா?

இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?"

No comments:

Post a Comment